Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
லக்னோ: மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வெறும் சப்பாத்தியும், இதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்படுவதாக சன்சந்தேஷ் என்ற இணையதளத்தின் நிருபர் பவன் ஜெய்ஸ்வால் என்பவர் மொபைலில் படமெடுத்து செய்தி வெளியிட்டார்.
இதனையடுத்து கல்வித்துறை அதிகாரி பிரேம்சங்கர் ராவ் போலீசில் புகார் அளித்தார். இந்த வீடியோ தவறானது, உள்நோக்கம் கொண்டது என்றும் அவரது மனுவில் கூறினார். இதனையடுத்து பத்திரிகையாளர், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் மேலாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்விறை அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்; பள்ளியில் சப்பாத்தி மட்டுமே தயாரிக்கப்படுகிறது. காய்கறிகள் கொண்ட குருமா மற்றொரு இடத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மேலும் சாதம், பருப்பும் வழங்கப்படுகிறது. ஆனால் வீடியோவில் இருப்பது உண்மையல்ல என்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.